திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 3 நேற்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோயிலின் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கிரகணம் முடியும் நேரத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூஜைகள் செய்தனர். மரபுப்படி சுத்திகரிப்பு சடங்குகளும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

