தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று (07.07.2025 – ஆனி 23, திங்கட்கிழமை) திருக்குட நன்நீராட்டுப் பெருவிழா ஆன்மிக பிரமிப்புடன் நடைபெற்றது.காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்று, அதன் பின்னர் காலை 06.50 மணிக்கு திருக்குட நன்நீராட்டு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, காலை 09.00 மணிக்கு சண்முகர் உருகு சட்ட சேவை நடைபெற்றது. மேலும், இன்று இரவு 07.00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது.